Wednesday, February 10, 2010

பிப்ரவரி 14





பிப்ரவரி 14'ஐ மையப்படுத்தி ஏதேனும் கவிதை எழுதவில்லையென்றால் நம்மை கவிஞன் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற ஐயப்பாட்டில் கவிதை எழுத உட்கார்ந்தேன்! ம்ஹும்ம்! கற்பனைக் குதிரை புல் மேயச் சென்றிருக்கக் கூடும்! அப்போதுதான் இந்த மரமண்டைக்கு Wordsworth' ன் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது!
" Poetry is the Spontaneous Overflow of Powerful Feelings." சரி வேறு வேலையப் பார்ப்போம் என்று கிளம்ப எத்தனித்தபோது, கல்லூரி நாட்களில் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்து கைகொடுத்தது!


அங்காடியில் கிடைக்காதது
அடித்துப் பிடுங்க முடியாதது
அள்ள அள்ளக் குறையாதது
அதிகம் கிடைத்தாலும் திகட்டாதது!
அது என்ன?


அமிழ்தினும் இனியது
அரும்பினும் மெல்லியது
அமைதியைத் தருவது
அனைவரும் விரும்புவது!
அது என்ன?


அன்பானது
அழகானது
அருமையானது
அவசியமானதும் கூட!
அது என்ன?


அனைத்துயிர்க்கும் வாய்த்தது!
ஆதாம் ஏவாளுக்கு மட்டும் வாய்க்காதது!
அது தாயன்பு!

2 comments:

அண்ணாமலையான் said...

அருமையா சொன்னிங்க... வாழ்த்துக்கள்..

Mugilan said...

நன்றி திரு. அண்ணாமலையான்!

Post a Comment