Wednesday, February 24, 2010

அவளைச்சேர காத்திருக்கின்றேன்




அவள்வரக் காத்திருந்தேன் கால்வலிக்க 
வந்தபின் அவளையே பார்த்திருந்தேன் கண்வலிக்க 
தன் தோழியைப்பர்த்து அவள் முறுவலிக்க 
சிலிர்த்து நின்றேன் மனம் படபடக்க!


நூறடிச்சாலையில் அவள் நடக்கையில்
ஓரடிக்கூட என்மனம் என்னோடு வரவில்லை!
புறவழிப்பாதையை அவள் கடக்கையில் - தன்
ஓரவிழிப் பார்வையில் என்னை உருக்குலைத்தாள்!


யாரோடும் பேசாமல் தனித்து நடந்தாள்
தோழியர் பலர் உடன்வருகையிலும் கூட! 
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தேன் நானும் 
யாரும் என்னுடன் வரவில்லையென்பதை உணராமலேயே!


பின்னொரு நாளில் என் மனைவியானாள்
என் பிள்ளைக்குத் தாயானாள் 
என்னை தவிக்கவிட்டு தெய்வமுமானாள் - மீண்டும்
அவளைச்சேர காத்திருக்கின்றேன் மனம் வலிக்க!

No comments:

Post a Comment