Monday, July 5, 2010

நான் பார்த்த சிட்னி




சில்லென்ற குளிர் 
சலனமில்லாத கடல் 

தும்ம வைக்காத காற்று 
தூரத்து மழை மேகங்கள் 

வெப்பம் காட்டாத சூரியன் 
வெளிர்நிற லில்லி மலர்கள் 

வேகமான ரயில் போக்குவரத்து 
விதிகளை மீறாத சாலைப்போக்குவரத்து

பாசிநிறக் கண்கொண்ட பாவையர் 
பளிங்குநிற மேனிகொண்ட பதுமைகள் 

இடுங்கிய கண்கள் கொண்ட  சீனப் பெண்டிர் - அதுவும் 
இல்லையெனத் தோன்றும் அவர் சிரிக்கையிலே 
  
ரோஜா மொட்டென மழலைகள் - ஏழு 
ராகம் சிந்தும் அவர் பேசுகையிலே 

வெறிச்சோடிய ரயில் நிலையங்கள் 
வெட்கத்தில் நனையாத முத்தங்கள் 


கேளிக்கை விடுதிகள் 
கொண்டாட்ட விடுமுறைகள் 

பூலோக சொர்கந்தான் சிட்னி 
பூமகளே நீ அருகில் இருந்தால்! 
 

5 comments:

Unknown said...

//இடுங்கிய கண்கள் கொண்ட சீனப் பெண்டிர் - அதுவும்
இல்லையெனத் தோன்றும் அவர் சிரிக்கையிலே //

அருமை. அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நல்லா இருக்கு...

அங்கேயுமா சீனப்பெண்டிர்?....

உங்களின் அந்த பூமகள் யாரோ?

Mugilan said...

@ கலாநேசன்
//அருமை. அருமை//
நன்றி கலாநேசன்

@ தஞ்சை வாசன்
//நல்லா இருக்கு...

அங்கேயுமா சீனப்பெண்டிர்?....//
ஆமாம் தஞ்சை வாசன்! சிட்னியில் சீன மக்கட்தொகை மிக அதிகம்! சிங்கப்பூரைப்போல் இன்றி மரியாதை தெரிந்த சீனர்கள்! வாழ்த்தியமைக்கு நன்றி!

Rajashekar said...

"" பூலோக சொர்கந்தான் சிட்னி
பூமகளே நீ அருகில் இருந்தால்! ""

சிட்னி மட்டுமல்ல முகில் அண்ணா ..,
ஆவறவர் பூமகள்கள் அருகிலிருக்கும் தருணம்
அனைத்து இடமும் சொர்க்கம் தான்...!!

Rajashekar said...

உங்கள் வரிகளை ரசித்த பின் தான் தோன்றியது...
நீங்கள் ரசித்தவை தான் வரிகளாக வந்துள்ளன என்பது...!!

Post a Comment